மின்வாரியத்தில் வேலை.... அடுத்த மோசடியில் சிக்குகும் ராஜேந்திர பாலாஜி?

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (10:48 IST)
தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார். 

 
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. அப்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் சாத்தூரை சேர்ந்த நபருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது.
 
மேலும் மதுரை ஆவினிலிருந்து திருப்பதிக்கு அனுப்பபட்ட நெய்யில் மோசடி, மதுரை ஆவினில் 2019 - 2020 ஆம் ஆண்டும் ரூ.30 கோடிக்கு தரமற்ற இயந்திரங்களை வாங்கி மோசடி ஆகியவற்றில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த 2 பேரிடம் மின்வாரியத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி என புகாரில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகள் இதுதான்.. தயாரா இருங்க..!

தெருவோர, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கிரெடிட் கார்டு.. பிரதமர் தொடங்கி வைத்த திட்டத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள்?

160 ஆண்டுகளுக்கு முன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தப்பித்த தினம்.. நினைவு கூறும் நெட்டிசன்கள்..!

கரூர் to சிபிஐ!.. அமைதியாக விஜய்!.. குழப்பத்தில் நிர்வாகிகள்!.. தவெகவில் நடப்பது என்ன?....

5 கொலை செய்த காதலர்.. 1 கொலை செய்த காதலி.. பரோல் பெற்று இன்று திருமணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments