இன்று முதல் ஆம்னி பேருந்து இயங்காது... சென்னை திரும்பும் பொதுமக்களுக்கு சிக்கல்..!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (08:18 IST)
இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில் இன்று மாலை சென்னை திரும்பும் பொது மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் இன்றும் மாலை முதல் சென்னை திரும்ப உள்ளனர். 
 
இந்த நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிக கட்டண வசூல் என கூறி 120 பேருந்துகளை சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்றார் கோரிக்கையை வலியுறுத்தி ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனால் ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில்  முன்பதிவு செய்தவர்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments