மினி லாரி மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி..!!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (17:52 IST)
சீர்காழியில் மினி லாரி மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேல அகணி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் மனைவி தேத்துரு மேரி ( 70). இவர் இன்று காலை சீர்காழி பிடாரி வடக்கு வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பழக்கடைக்கு வந்த மினி லாரி, மூதாட்டி தேத்துரு மேரி மீது  மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 
ALSO READ: 55 ரன்களில் சுருண்டது தென்னாபிரிக்கா..!! முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்..!!
தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார், தனிப்பிரிவு போலீசார் மூர்த்தி மற்றும் காவலர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை செய்து வருகின்றனர். லாரி மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவுன் சந்திப்பு ஏன்?.. ஓப்பனாக சொல்லிட்டாரே ஓபிஎஸ்!...

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments