Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடையை மூட சொல்லியும், பின்பக்கம் வழியாக வியாபாரம்! – துணிக்கடைக்கு சீல்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (10:26 IST)
சென்னையில் கொரோனா காரணமாக துணிக்கடை ஒன்றை மூட உத்தரவிட்ட நிலையில் பின்பக்க வழியாக வியாபாரம் செய்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வந்த துணிக்கடை ஒன்றில் பணியாற்றிய 17 பேருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அந்த கடையை மூடும்படி மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் முன்பக்கம் கடையை மூடிவிட்டு பின்வாசல் வழியாக துணிக்கடை ரகசிய வியாபாரம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த ராயபுரம் மண்டல உதவி ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை வெளியேற்றியதுடன் கடைக்கும் சீல் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments