Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் அமிலக் கசிவை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (09:26 IST)
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டிருக்கும் அமிலக் கசிவை சீர் செய்ய அதிகாரிகள் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி கலெக்டர், சந்தீப் நந்தூரி மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக மக்கள் பயப்படத் தேவையில்லை. இதை அப்புறப்படுத்தப்படும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
அதன் அடிப்படையில் நேற்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உட்பட சிலர் கந்தக அமிலக் கிடங்கில் ஏற்பட்ட கசிவை சீர் செய்தனர். அப்போது பணியில் இருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். 
 
இதனால் ஸ்டெர்லைட் அமிலக் கசிவை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இரண்டாவது நாளாக கசிவை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கசிவை சரி செய்ய ஸ்டெர்லைட் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments