Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊடகப்பணியாளர்கள் அனைவருக்கும் சலுகை: முதல்வருக்கு முத்தரசன் வேண்டுகோள்

ஊடகப்பணியாளர்கள் அனைவருக்கும் சலுகை: முதல்வருக்கு முத்தரசன் வேண்டுகோள்
, செவ்வாய், 1 ஜூன் 2021 (21:37 IST)
ஊடகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் சலுகை வழங்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
சமீபத்தில் முதல்வர் அறிவித்த அறிவிப்பு ஒன்றில் ஒருசில ஊடக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதேபோல் ஊடகத் துறையில் பணிபுரிந்து வருபவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் ரூ.5 லட்சம் வரை நிதி உதவி செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இந்த சலுகை மற்றும் நிதியுதவி ஒருசில ஊடகங்கள் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில் அனைத்து ஊடகத்தில் பணிபுரிபவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்த வேண்டுகோளில்,’ஊடக நிறுவனத்தின் பணியாளர் அடையாள அட்டை வைத்திருக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் சலுகை வழங்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இ.பிஎஃப் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க கடை தேதி இதுதான் ~!