Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 28ஆம் தேதி தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Tiruvannamalai
, வியாழன், 26 அக்டோபர் 2023 (10:21 IST)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 28ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுவதால் அன்றைய தினம் 3 மணி முதல் 6 மணி வரை தரிசனம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த அன்னாபிஷேகம் நடைபெறும் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதும் தரிசனம் ரத்து செய்யப்படும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அக்டோபர் 28ஆம் தேதி மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே அன்றைய தினம் முழுவதும் பக்தர்களுக்கு கோவிலில் செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாலை 6:00 மணிக்கு மேல் வழக்கம் போல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு மில்லியன் டாலர் பணத்தை ஹெலிகாப்டரில் இருந்து கொட்டிய நடிகர்.. பரபர்ப்பு தகவல்..!