Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்கட்சி என்று இல்லாமல் மனம் விட்டு பாராட்டிய ஓபிஎஸ்!

Webdunia
சனி, 29 மே 2021 (09:23 IST)
கொரோனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு, நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என ஓபிஎஸ் பாராட்டு. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள், ஆக்ஸிஜன் வசதிகளையும் அரசு ஏற்படுத்தி வருகின்றது.
 
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இறந்தவர்கள் எண்ணிக்கையை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
ஆனால் மறுபுறம் ஓபிஎஸ், கொரோனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு, நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன் என பாராட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments