Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் அப்படி பேசியிருக்க வாய்ப்பே இல்லை - அதிமுக மீது தமிழிசை நம்பிக்கை

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (14:31 IST)
ஓபிஎஸ் யாரை மனதில் வைத்து பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் பாஜகவை விமர்சிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழிசை சௌவுந்தரராஜன் கூறியுள்ளார்.

 
தமிழகத்தில் தேசிய கட்சிகள் எந்த காலத்திலும், எந்த நிலையிலும் காலூன்ற முடியாது. அதுதான் தமிழக மக்களின் தீர்ப்பு என துணை முதல்வர் ஓபிஎஸ் நேற்று கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகம் பாஜகவின் பிடியில் இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
 
இந்நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு கூறியது பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
 
தேசிய காட்சிகள் காலூன்ற முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாரை மனதில் வைத்து பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் பாஜகவை அவர் விமர்சித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை மனதில் வைத்து கூட பேசி இருக்கலாம்.
 
ஆனால் தொடர்ந்து எல்லோரும் பாஜக காலூன்ற முடியாது என்ற கருத்தை கூறி வருகிறார்கள். காலூன்ற முடியாத கட்சியை பற்றி அவர்கள் ஏன் பேச வேண்டும். மற்ற கட்சிகள்தான் கூட்டணியை தேடிக் கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments