Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (17:33 IST)
பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உயராமல் இருப்பது வாகன ஓட்டிகள் பெரும் நிம்மதியை அளித்தாலும், திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் டீசல் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தற்காலிகமானது என்றும் விரைவில் சென்னையில் டீசல் தட்டுப்பாடு இருக்காது என்றும் பெட்ரோல் நிலைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களுக்கு தேவையான டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments