காவல்துறையினர் சினிமா பிரபலங்களுடன் செல்பி எடுத்தால் நடவடிக்கை: மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

Siva
திங்கள், 29 ஏப்ரல் 2024 (08:53 IST)
பணி நேரத்தில் சினிமா பிரபலங்களுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஏற்கனவே பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பிரமுகர்களை பாதுகாக்காமல் சினிமா பிரபலங்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கும் எடுப்பது வழக்கமாக உள்ளது. இதனை அடுத்து பணி நேரத்தில் சினிமா பிரபலங்களுடன் செல்பி மற்றும் போட்டோ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார்

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கும் நேரத்தில் சினிமா பிரபலங்கள் முக்கிய பிரமுகர்கள் தலைவர்களுடன் புகைப்படம் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் ஆட்டோகிராப் வாங்குவது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் துறைரீதீலான  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே இந்த விவகாரத்தில் பெண் போலீஸ் ஒருவர் மீது நடவடிக்கை பாய்ந்து உள்ள நிலையில் அனைத்து காவல்துறையினருக்கும் தற்போது மாநகர காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments