Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகநூல் நட்பால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியை உயிருடன் கொளுத்த முயற்சித்த காதலன்..!

Siva
திங்கள், 29 ஏப்ரல் 2024 (08:48 IST)
முகநூல் நட்பால் ஏற்பட்ட விபரீதத்தில் காதலியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி காதலன் கொளுத்த முயற்சித்த சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவரை முகநூல் மூலம் நட்புடன் பழகி வந்த நிலையில் இருவரும் திடீரென காதலராக மாறிவிட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் குணசேகர் திடீரென ராஜபாளையம் வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாண்டிச்செல்வியிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால் உடனே திருமணம் செய்ய முடியாது என்று பாண்டிச்செல்வி கூறியதாகவும் தெரிகிறது

இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த குணசேகர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து பாண்டிச்செல்வி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தலைமறைவாகிவிட்டார்

இதனை அடுத்து பாண்டிச்செல்வி யை காப்பாற்ற முயன்ற அவரது அக்கா பாண்டீஸ்வரிக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும் இது குறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் தலைமறைவாகியுள்ள குணசேகரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

முகநூல் நட்பால் ஏற்பட்ட விபரீதத்தால் காதலியை காதலனே உயிருடன் கொளுத்த முயன்ற சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments