Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்: காரணம் என்ன?

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (19:54 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைக்க  சோழவரத்தை சேர்ந்த திமுக தொண்டர்கள் 2 சிலைகளை கொண்டு வந்தனர். இந்த இரண்டு சிலைகளும் ஃபைபர் பொருட்களால் செய்யப்பட்டிருந்தது. 
 
வெள்ளை வேட்டி அணிந்து இருக்கையில் உட்கார்ந்தவாறு அமைக்கபப்ட்டிருந்த இந்த சிலையின் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்றும், மற்றொரு சிலை 80 ஆயிரம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் சிலைகளை வைக்க இதுவரை யாருக்கும் உரிய அனுமதி  தரப்படவில்லை. அனுமதி இல்லாமல் இந்த சிலைகள் கொண்டு வரப்பட்டதால் சிலைகளை நினைவிடத்தில் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சிலைகளை கொண்டு வந்த தொண்டர்கள் வருத்தத்துடன் திருப்பி எடுத்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments