Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்: காரணம் என்ன?

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (19:54 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைக்க  சோழவரத்தை சேர்ந்த திமுக தொண்டர்கள் 2 சிலைகளை கொண்டு வந்தனர். இந்த இரண்டு சிலைகளும் ஃபைபர் பொருட்களால் செய்யப்பட்டிருந்தது. 
 
வெள்ளை வேட்டி அணிந்து இருக்கையில் உட்கார்ந்தவாறு அமைக்கபப்ட்டிருந்த இந்த சிலையின் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்றும், மற்றொரு சிலை 80 ஆயிரம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் சிலைகளை வைக்க இதுவரை யாருக்கும் உரிய அனுமதி  தரப்படவில்லை. அனுமதி இல்லாமல் இந்த சிலைகள் கொண்டு வரப்பட்டதால் சிலைகளை நினைவிடத்தில் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சிலைகளை கொண்டு வந்த தொண்டர்கள் வருத்தத்துடன் திருப்பி எடுத்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments