அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது; அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (12:18 IST)
ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று குருமூர்த்தி பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். 
தமிழக அரசியலில் பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என துக்ளக் இதழின் பத்திரிக்கை ஆசிரியரான ஆடிட்டர்  குருமூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று குருமூர்த்தி கூறுவது அவரது கருத்து. ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். தமிழக மக்கள் அம்மாவின் அரசுக்குதான் ஆதரவு தருவார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் கூறினார்
 
மேலும் மறைந்த எழுத்தாளர் ஞானி, இறுதியாக தனது முகநூல் பக்கத்தில் பாஜகவை வெளிப்படையாக ஆதரிக்கும் குருமூர்த்தி பற்றிய தனது கருத்தை வெளியிட்டுள்ளார். துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன்.

குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும் என்று ஞானி, இறுதியாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில்  பதிவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments