Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரஸ் காய்ச்சலால் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:59 IST)
வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக புதுவையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புதுவை போலவே தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தை போலவே தமிழகத்தில் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்றும் பெரிய அளவில் பரவவில்லை என்றும் புதுச்சேரியை போலவே தமிழகத்தில் பள்ளி விடுமுறை விட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். 
 
இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது என்றும் இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரஸ் ஆன ஹச்3என்2 என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்கி வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்கூட்டியே பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments