Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஆண்டுகளுக்கு மேல் அரியர் வைத்திருந்தால் டிகிரி கிடையாது: அண்ணா பல்கலை அறிவிப்பு

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (08:23 IST)
டிகிரி படித்து வரும் சில மாணவர்கள் அரியர் இருந்தால் அவற்றை முடிக்க வருடக்கணக்கில் கால அவகாசம் எடுத்து கொள்வதுண்டு. இந்த நிலையில் இனிமேல் 7 ஆண்டுகளுக்குள் அரியரை முடிக்க வேண்டும் என்றும், 7 ஆண்டுகளுக்கு மேல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது என்றும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதனால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இனிமேல் டிகிரி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை 7 ஆண்டுகள் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பாக வரும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாத தேர்வுகளில் அவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும், ஆனால் இதுவே அந்த மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் பல அரியர்கள் வைத்துள்ள மாணவர்கள் ஒவ்வொன்றாக எழுதி என்றாவது ஒருநாள் டிகிரி வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தின் மீது மண் விழுந்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு ஆரோக்கியமான கல்வி முறைக்கு தேவைதான் என்று கல்வி அறிஞர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments