Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலின் பேச்சால் உருவாகும் மூன்றாவது அணி

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (08:13 IST)
ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் மூன்று பெரிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர முடிவு செய்திருந்தது. ஆனால் கருணாநிதி சிலைதிறப்பு விழாவில் 'ராகுல்தான் பிரதமர்' என மு.க.ஸ்டாலின் கூறியதால் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் கூறியதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல தலைவர்கள் ஸ்டாலின் மீது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மூன்றாவது அணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக மூன்றாம் அணியை உருவாக்க 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆதரவு 3 வது அணிக்குக் ஆதரவு கோரினார். மேலும் அவர், நாளை மேற்குவங்க முதல்வர் மம்தாவையும் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக ஒரு வலிமையான அணி உருவாகி வந்த நிலையில் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்தது போல் ஸ்டாலின் பேச்சால் தற்போது 3வது உருவாகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments