மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை எழுவர் விடுதலை இல்லை: சுப்பிரமணியன்சுவாமி

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (17:28 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கூறி பல மாதங்கள் ஆகிவிட்டது.
 
இதனையடுத்து தமிழக அரசும் இதுகுறித்து தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. ஆனால் கவர்னர் இந்த தீர்மானம் குறித்து நடவடிக்கை எடுக்காததால் எழுவர் விடுதலை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
 
இந்த நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தெரிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மக்களிடம் நியாயம் கேட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்: இன்று முதல் அமல்; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கடும் கண்டனம்..!

எச்-1பி விசாவால் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்? இங்கே வாருங்கள்.. சீனா அறிமுகம் செய்யும் K-விசா..!

இன்று முதல் சென்னையில் பொதுப்போக்குவரத்துக்கு ஒரே செயலி: 'Chennai One' பயன்கள் என்னென்ன?

காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து யமுனையில் வீசிய காதலன்! உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி என விஜய் சொன்னது உண்மைதான்: ராஜேந்திர பாலாஜி..

அடுத்த கட்டுரையில்
Show comments