அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்ட மாட்டோம்: கே.எஸ்.அழகிரி

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:07 IST)
தமிழகம் வரும் அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட மாட்டோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார் 
 
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வரும் 21ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். சென்னையில் அவர் தமிழக பாஜக தலைவர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவார் என்றும் ரஜினிகாந்தை அவர் சந்திப்பார் என்றும் முக அழகிரி பாஜகவில் சேரும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் பீகார் மாநிலத்தை அடுத்து அமித்ஷாவின் பார்வை தமிழகத்தில் மீது பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் ’கோ பேக் மோடி’ என்ற வாசகங்களுடன் கருப்புக்கொடி காட்டி வரும் திமுக காங்கிரஸ் கட்சியினர் இந்த முறை அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட மாட்டார்கள் என்று செய்திகள் வெளியானது 
 
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் இன்று பேட்டி அளித்தபோது ’அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் பாட்டுக்கு வரட்டும், போகட்டும் என்றும், மதவாத அரசியல் செய்யும் கட்சி பாஜக என்றும் காங்கிரஸ் செய்வது கொள்கை ரீதியான அரசியல்’ என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments