Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செம கேம் ப்ளேயர்... கழுவுற மீன்ல நழுவுற மீனா யார் கிட்டயும் சிக்காத ரம்யா பாண்டியன்

செம கேம் ப்ளேயர்... கழுவுற மீன்ல நழுவுற மீனா யார் கிட்டயும் சிக்காத ரம்யா பாண்டியன்
, வியாழன், 19 நவம்பர் 2020 (13:36 IST)
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்குள்ளே யார் மணிக்கூண்டு டாஸ்கில் யார் வெற்றி அடைவார்கள் என்பதை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் இதுகுறித்து ரம்யா , சம்யுக்தா , ஆஜித் உள்ளிட்ட மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆஜித்திடன் யார் டாஸ்க் செய்யவில்லை...? உங்கள் மனதில் தோன்றும் இருவரை கூறுங்கள் என்றவுடன் ஆஜித், சுச்சி மற்றும் ஷிவானியை கூறுகிறார். உடனே ரம்யா, ஷிவாவனி முழு நேரமும் பாலா மாமா பாலா மாமா  என அவரை எண்டெர்டைன் செய்வதிலேயே தான் கவனத்தை செலுத்துகிறார். என கூறி ஷிவானியை போன்றே நடித்து காண்பித்து பங்கமாக கலாய்த்து தள்ளினார்.  

ஆனால், ஆஜித் அடுத்தவர்களை போர் பெர்பார்மர் என்று சொல்லுவதற்கு தகுதியே இல்லை. அடுத்ததாக பிக்பாஸ் வீட்டை விட்டு சுச்சி அல்லது ஆஜித் இருவரில் யாரேனும் வெளியேறினால் தான் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், நம்பிக்கை இல்லை... பேசுமால் சுரேஷை மீண்டும் உள்ளே வரவைத்தால் நல்லா இருக்கும்.  ஷோ ரொம்ப மொக்கையா போகுது. இன்னிக்கு நல்லா இருக்கும் நாளைக்கு நல்லா இருக்கும்னு பார்த்தா அறுத்து தள்ளுறாங்க....

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிக்கிடான்யா... சிம்பு படத்திற்கு சிக்கல்!!