Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''என்.எல்.சி நிறுவனம் இந்த நிலத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்துவிட்டது- கடலூர் மாவட்ட ஆட்சியர்

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (14:36 IST)
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்  2 வது சுரங்கப் பணிகளுக்கான வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில்  சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

கடலூர் வளையமாதேவியில் 8 ஏக்கர் பரப்பளவில்  ஜேசிபி இயந்திரத்தின் மூலம் விளைநிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்தப் பரபரப்பான சூழலில் கடும் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தற்போது என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், ''இந்த  நிலத்திற்கு பணம் கொடுக்கும்போது அதை கையப்படுத்தியிருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டிருக்காது'' என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தர்மராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ''என்.எல்.சி நிறுவனம்  இந்த நிலத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதமே விளை நிலங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பயிர்களுக்கு இழப்பீடு கொடுக்க என்.எல்.சி நிர்வாகம் முன்வந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments