Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (07:42 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால்  அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இப்புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே இன்று அல்லது நாளை கரையை கடக்கும் எனவும் அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும் என்பதால் அரசு பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 
 
புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் , கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தியதுடன் தமிழகத்தில் உள்ள 11 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுத்தியுள்ளது. ஏற்கனவே பல துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments