Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (07:42 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால்  அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இப்புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே இன்று அல்லது நாளை கரையை கடக்கும் எனவும் அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும் என்பதால் அரசு பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 
 
புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் , கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தியதுடன் தமிழகத்தில் உள்ள 11 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுத்தியுள்ளது. ஏற்கனவே பல துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments