Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த 3 ஊரை சேந்தவங்களா நீங்க? நித்தி ஆஃபர் உங்களுக்குதான்!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (11:14 IST)
நித்யானந்தா புதிதாக உருவாக்கி வரும் கைலாசா நாட்டில் தமிழகத்தின் மூன்று ஊர்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா உருவாக்கி வருவதாக கூறப்படும் கைலாசா நாடு குறித்த செய்திகள் மக்களிடையே வைராலாகி வருகின்றன. கடந்த விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கான தங்க நாணயங்களை நித்யானந்தா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டு நித்யானந்தாவிற்கு கடிதம் அனுப்பிய நிலையில், அவரது கோரிக்கைக்கு அனுமதி அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நித்யானந்தா கைலாசா நாட்டின் பொருளாதார மற்றும் வணிக செயல்பாடுகளில் மதுரை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில் மற்ற மாவட்டத்தை சேர்ந்த நெட்டிசன்கள் பலர் அந்த மூன்று மாவட்டத்தில் இல்லாமல் போய்விட்டதை மீமாக பதிவிட்டு வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments