குடிமகன்களுக்கு செய்தி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:58 IST)
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி நாளை (ஜனவரி 30) தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மூடுமாறு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


 
மகாத்மா காந்தி ஜனவரி 30ம் தேதி மரணம் அடைந்தார். அவரது அனைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவிடக் கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்துறை செயலரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்துக் கொண்ட நீதிமன்றம், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஏற்கனவே ஜனவரி 15, ஜனவரி 21 மற்றும் ஜனவரி 26 
ஆகிய நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments