Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

Mahendran
செவ்வாய், 3 ஜூன் 2025 (09:22 IST)
மொரிஷியஸ் ஸ்நாட்டில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த, பிறந்து 8 நாளாகிய குழந்தை விமானத்திலேயே உயிர் இழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மொரீஷியஸ் நாட்டில் பிறந்த குழந்தைக்கு இருதயப் பிரச்சனை இருந்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து, மொரீஷியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு இருதயச் சிகிச்சைக்காக அந்த குழந்தை, அதன் பெற்றோர்களால் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டது.
 
இந்த நிலையில், விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போதே அந்த குழந்தை உயிரிழந்ததாக தெரிகிறது. இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
 
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், குழந்தை உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த குழந்தையின் பெற்றோர் மோனிஷ் குமார் மற்றும் பூஜா ஆகியோர் சென்னை வந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் தங்கள் இறந்த குழந்தையுடன் மொரீஷியஸ் நாட்டுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments