Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் அறிமுகமாகும் கோதுமை பீர்: விலை என்ன தெரியுமா?

Beer

Mahendran

, வியாழன், 25 ஏப்ரல் 2024 (10:55 IST)
தமிழகத்தில் ஏற்கனவே பல வகையான பீர்கள் டாஸ்மாக் மது கடைகளில் விற்பனை ஆக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கோதுமை பீர் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
டாஸ்மாக் மது கடைகளில் தற்போது 35 வகையான பீர்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 100% கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்த பீர் 160 முதல் 170 ரூபாய் வரையில் விற்பனையாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
கோதுமையில்   ஐந்து வகையான புதிய பீர்கள் தயார் செய்து விற்பனை செய்ய டாஸ்மார்க் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய வகை பீர்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பீர்கள் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து கடைகளுக்கும் கிடைக்கும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த தகவல் குடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ள நிலையில் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில்,  கோதுமை பீர் அறிமுகமானால் விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாம்பரத்தில் ரூ.4 கோடி விவகாரம்.. நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி தகவல்.!