புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் திமுகவை மட்டுமே விமர்சனம் செய்வார்கள்: கனிமொழி

Mahendran
திங்கள், 15 செப்டம்பர் 2025 (14:29 IST)
கன்னியாகுமரியில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் தி.மு.க.வை விமர்சிப்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
 
"புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும், தி.மு.க.வைப் பற்றி பேசினால் தான் அவர்களுக்கு ஓர் அடையாளம் கிடைக்கும். அதனால்தான் அவர்கள் எப்போதும் தி.மு.க.வை விமர்சனம் செய்வார்கள்" என்று கனிமொழி தெரிவித்தார்.
 
மேலும், "தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையாகவும், சிந்தனை மற்றும் அரசியல் நிலையின் போக்கை மாற்றியமைத்த பெருந்தகை அண்ணா. அவரது வழிகாட்டுதலின்படிதான் தற்போது தி.மு.க.வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

அடுத்த கட்டுரையில்
Show comments