Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; ரெட் அலர்ட் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (09:14 IST)
வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடியே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மத்திய பிரதேசம் மற்றும் கோவாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடற்கரையோர மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழையே பெய்யும் என்றாலும் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments