கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (09:04 IST)
கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் 
 
இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா தொற்று உறுதி உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று
இந்த தகவலை முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். தனது கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தனக்கு தேவையான அறிவுரைகளையும் சிகிச்சையும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் முதல்வர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments