Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் பயணிகளுக்கான புதிய வசதி..!!

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (15:47 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு புதிய வசதி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை கவரும் விதமாக ரயில் நிலையங்களில் இருந்து 6 முதல் 8 கி.மீ. தூரத்திற்கு செல்லும் வகையில் வாடகை கார் வசதியை அறிமுகபடுத்தி உள்ளனர். ரூ.10 கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் இந்த வசதியை எளிதில் பெறலாம். மொபைல் ஆப் மூலம் செல்லும் வாடகை காரில், இடம், நேரம் மற்றும் சீட் வசதியை புக் செய்து கொள்ளலாம்.

இந்த வாடகை கார் வசதியை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த கார்கள் மின்சார பேட்டரி மூலம் இயங்கக்கூடியவை. மேலும் மெட்ரோ நிர்வாகமும், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமும் இந்த வசதிகளை வழங்கியுள்ளனர். இந்த வசதி அனைத்து மெட்ரோ நிலையங்களுக்கும் 3 மாதங்களில் விரிவுப்படுத்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments