Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்லை - சென்னை வந்தே பாரத் இன்றும் ரத்து.. மற்ற ரயில்களின் நிலவரம் என்ன?

நெல்லை - சென்னை வந்தே பாரத் இன்றும் ரத்து.. மற்ற ரயில்களின் நிலவரம் என்ன?
, புதன், 20 டிசம்பர் 2023 (07:57 IST)
தென் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வந்தே பாரத் ரயில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இன்று நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் ரயில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என்றும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்படும் என்றும் மதுரை - புனலூர் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி - ஈரோடு ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும்  மழை வெள்ளத்தால் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டவாளங்கள் சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீட்பு பணியில் ஒருங்கிணைப்பு இல்லை.. கவர்னர் குற்றச்சாட்டு.. அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்..!