Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் வெளியீடு

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:39 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் 13ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தேர்வை நடத்த வேண்டாம் என தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீட் தேர்வு நடத்தியே தீருவது என்று தேசிய தேர்வு முகமை உறுதி செய்துள்ளது 
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற இருப்பதாகவும் இதில் சென்னை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒருபக்கம் நீட் தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நீட் தேர்வை நடத்துவதில் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமையும் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments