Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு.. தமிழகத்தில் மட்டும் 1.55 மாணவர்கள் விண்ணப்பம்..!

Siva
திங்கள், 25 மார்ச் 2024 (07:34 IST)
2024 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது


2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி, மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.  

இதில் தமிழகத்தில் இருந்து மட்டும்  1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,39,125 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 18.72 லட்சம் பேரும்,  கடந்த ஆண்டில் 20.87 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments