Publish Date: Thu, 21 Mar 2024 (19:21 IST)
Updated Date: Thu, 21 Mar 2024 (19:25 IST)
ஈரோடு மாவட்டத்திற்கு வரும் மார்ச் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டடம் விழாவை முன்னிட்டு வரும் மார்ச் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது: பள்ளி, கல்லூரிகளுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 30 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.