Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”வசூல் ராஜா படம் மாதிரி இருக்கு”.. நீட் ஆள்மாறாட்ட வழக்கு குறித்து நீதிபதி கருத்து

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (14:33 IST)
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவுக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்டேசன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், வெங்கடேசன் மற்றும் உதித் சூர்யா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த மனுவை இன்று விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம், மாணவர் உதித் சூர்யா மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் இந்த வழக்கு, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் வரும் திட்டம் போல் உள்ளது என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments