Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

Mahendran
செவ்வாய், 21 மே 2024 (10:20 IST)
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை என பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து  நீலம் பண்பாட்டு மையம் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, இதை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால்  படுகொலை செய்யப்பட்ட முத்துமனோவின் நண்பர்
பட்டியலின தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் தீபக்ராஜா பாளையங்கோட்டையில் உணவகத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம்
 
சக மனிதனை படுகொலை செய்யும் மறவர் சமூகத்தை சேர்ந்த சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக  எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த பதிவுக்கு நெட்டிசன் பதிலடி கொடுத்த போது ’கொலை செய்யப்பட்டவர் ஒரு ரவுடி என்றும் அவர் மீது ஏகப்பட்ட கொலை வழக்குகள் இருக்கிறது என்றும் ஒரு கொலைகாரனுக்காக சாதிவெறி என்ற அம்சத்தை தூக்கிக் கொண்டு வருவது நியாயமல்ல என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments