Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழ்நாட்டையே இரண்டாக பிரிப்போம்: நயினார் நாகேந்திரன்

Advertiesment
Nayinar
, செவ்வாய், 5 ஜூலை 2022 (13:21 IST)
நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா எங்களை தனித்தமிழ் கேட்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டை தனியாக கேட்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள் என்றும் தனித்தமிழ்நாடு கேட்கும் நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்போம் என்றும் கூறியுள்ளார். 
 
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே பிரித்து விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்! – பள்ளிகள் தீவிர ஆலோசனை!