Publish Date: Fri, 05 Aug 2022 (15:53 IST)
Updated Date: Fri, 05 Aug 2022 (15:54 IST)
இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனதை அடுத்து 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாட தயாராகி வருகிறது. இந்த நிலையில் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
பிரதமர் மோடி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என கோரியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் மக்களுக்கு தேசிய கொடி கிடைக்கும் வகையில் தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
சென்னை நகரத்தில் உள்ள அண்ணா சாலை தபால் நிலையம் உள்பட பல தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்கப்படும்
ரூ.25 முதல் தேசிய கொடி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின கொடிகளை சில்லரையாகவும் மொத்தமாகவும் பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என்றும் இணையதளத்தின் மூலம் பதிவு செய்தும் தேசியக்கொடியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் சென்னை நகர மண்டல தபால் துறை தலைவர் நடராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்