Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துடன் கடிதம் அனுப்பிய மோடி

ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துடன் கடிதம் அனுப்பிய மோடி
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (17:00 IST)
முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய பூங்கொத்துடன் கடிதம் அனுப்பி பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழக முழுவதும் அனைத்து தரப்பினரும் அவரது உடல்நலம் குறித்து கவலை தெரிவித்தனர்.
 
பின்னர் அவரது உடல்நிலைக்கு பாதிப்பு இல்லை. அவர் குணமாகிவிடார் என்ற செய்தியை அப்போலோ மருத்துவமனை தெரிவித்ததையடுத்து அதிமுக கட்சியினர் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர். 
 
ஜெயலலிதாவில் உடல்நலம் குணமடைய தமிழகம் முழுவதும் அவரது தொண்டர்கள் கோயில்களில் பிராத்தனை மேற்கொண்டனர். தற்போது பிரதமர் மொடி அவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய பூங்கொத்துடன் கடிதம் அனுப்பி பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் மக்களுடைய பிரார்த்தனை எப்போதும் முதலமைச்சரை நலமுடன் வாழவைக்கும் என்று தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி நீர் விவகாரம் ; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு