Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

சசிகலா வந்ததால் மட்டும்தான் அ.தி.மு.கவை காப்பாற்றமுடியும்: நாஞ்சில் சம்பத்

Advertiesment
சசிகலா

Mahendran

, வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (18:36 IST)
சசிகலா அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.  
 
அதிமுகவின் அப்பாவி தொண்டர்கள் சசிகலாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் என்றும் சசிகலா வந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை தொண்டர்கள் நெஞ்சில் காலூன்றி விட்டது என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தொண்டர்கள் மட்டுமல்ல அதிமுக நிர்வாகிகளும் தற்போது சசிகலா தலைமை ஏற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று கூறி வருகிறார்கள் என்று தெரிவித்தார் 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவார் என்றும் சசிகலா அதிமுகவை வழிநடத்துவார் என்றும் நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026 தான் எனக்கும் இலக்கு.. 6 மாதங்களுக்கு முன்பே நான் சொல்லிவிட்டேன்! சரத்குமார்!