Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம்

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (12:38 IST)
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்த ஆலோசனை நடந்துவருவதாக  ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் நாங்குநேரி எம்.எல்.ஏ வான வசந்த குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றதால், கடந்த மே மாதம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இந்த இரு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இல்லை.

இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்டேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில், வேலூருக்கு மட்டுமே தேர்தல் என தேர்தல் அணையம் அறிவித்தது. வேலூரில் பாராளுமன்றத் தேர்தல் நாளை (05.08.2019) நடைபெறவிருக்கும் நிலையில், அந்த தேர்தல் முடிந்ததும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்த ஆலோசனை நடந்துவருவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், பாராளுமன்ற இடைத்தேர்தல் 9 ஆம் தேதியுடன் முடிந்துவிடுவதால் அதன் பிறகு ஒவ்வொறு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டசபை இடைத்தேர்தல் நடத்தபடும்.

தமிழகத்தில் மே, ஜூன் ஆகிய மாதத்திலேயே இரண்டு தொகுதி காலியாகி விட்டது. அதனால் இங்கு நவம்பர் மாதத்திற்குள்ளே இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என திட்ட்மிட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments