Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (18:54 IST)
நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
மூன்றாவது அலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சில எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரவிய நிலையில் தற்போது நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments