Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்பது அவசியம்: நயினார் நாகேந்திரன்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (10:50 IST)
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை அவசியம் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஒற்றை தலைமையை கைப்பற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார் என்பதும் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் ஆதரவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூடுவது சம்பந்தமான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை அவசியம் என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் நடக்கும் சர்ச்சைகள் குறித்து பாஜக கருத்து தெரிவிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடு.. நோக்கியா போனை வைத்து இறந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு..!

டெஸ்லா கார் முதல் ஷோரூம் இன்று இந்தியாவில் திறப்பு: மாடல் Y கார் பற்றிய விவரங்கள்!

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments