Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் விடுதலை!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (13:46 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பதும் அவர்கள் கடந்த சில நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கடந்த அக்டோபர் 31ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் விடுதலை செய்யப்பட்ட 23 மீனவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments