Publish Date: Wed, 22 Jun 2022 (13:32 IST)
Updated Date: Wed, 22 Jun 2022 (13:34 IST)
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை பிரசனை நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகள் ஒற்றை தலைமையை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர்
இந்த ரேஸில் ஈபிஎஸ் கிட்டத்தட்ட முந்திவிட்டதாகவும் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த நிலையில் இன்னொரு ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் எம்பி மைத்ரேயன் அவர்களும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் கூடாரம் ஒவ்வொன்றாக காலியாகி வருவதாகவும் ஈபிஎஸ் அணி வலுவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது