Publish Date: Tue, 21 Jun 2022 (20:05 IST)
Updated Date: Tue, 21 Jun 2022 (20:06 IST)
இன்னும் சில நிமிடங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வராக இருந்த ஓபிஎஸ் திடீரென சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று பேட்டி அளித்தார். இந்த பேட்டி தமிழக அரசியலையே உலுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது