Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஃப்தார் நோன்புக்கு வந்தவர்களை தவெகவினர் அடித்து விரட்டினர்!? - விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்!

Prasanth Karthick
செவ்வாய், 11 மார்ச் 2025 (08:21 IST)

சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் நோன்பு குறித்து இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளது.

 

ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதான நோன்பில் இஸ்லாமியர்கள் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

 

அதில் “விஜய் நடத்திய இப்தார் நிகழ்ச்சி கண்ணியமான இப்தார் நிகழ்ச்சிக்கு விரோதமாக நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இப்தார் நிகழ்ச்சிக்கு தொடர்பில்லாத குடிக்காரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டனர். உண்மையாக நோன்பு கடைபிடித்த இஸ்லாமியர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பவுன்சர்கள் மூலமாக அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டனர்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

 

மேலும் நோன்பு திறக்கும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே விஜய் வந்தது தவறு என்றும், அவர் நடத்திய இப்தார் நிகழ்ச்சி விதிமுறைகளுக்கு மாறாக இருந்ததால் அவர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments