Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வெளியேறுங்கள்.. தூத்துகுடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 11 மார்ச் 2025 (07:46 IST)
தூத்துக்குடி உள்பட சில தென் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஒருபுறம், வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கன மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments