Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் தலை தூக்கும் கருப்பு பூஞ்சை நோய்!

தமிழகத்தில் தலை தூக்கும் கருப்பு பூஞ்சை நோய்!
, வியாழன், 20 மே 2021 (09:01 IST)
கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பு தற்போது தமிழகத்திலும் வந்துள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அதிலிருந்து மீள்பவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் அதிகம் பரவி வருகிறது. 
 
பூஞ்சை தொற்று காரணமாக கருப்பு பூஞ்சை அல்லது ‘மியூகோர்மைகோசிஸ்’ நோய் ஏற்படுகிறது. இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடியது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய எனது ஆன்மீக பூமி… மோடிக்கு ஆதரவாக பேசும் ஹெய்டன்!