சவால் விட்ட அண்ணாமலை! ஏற்றுக் கொண்ட திமுக எம்.பி! – காத்திருக்கு காரசார விவாதம்!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (13:24 IST)
திமுகவினர் என்னுடன் விவாதிக்க தயாரா என பாஜக அண்ணாமலை விடுத்த சவாலை திமுக எம்.பி செந்தில் குமார் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழக பாஜகவில் இணைந்ததில் இருந்து திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அவரது பேச்சுக்கு திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வரும் அண்ணாமலை தன்னுடன் திமுகவினர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ள திமுக எம்பி செந்தில் குமார் இருவருக்கும் இடையேயான விவாதத்தை செய்தி சேனல்கள் யாராவது ஒளிபரப்ப ஏற்பாடு செய்தால் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவருக்கும் இடையேயான விவாதத்தை காண இரு தரப்பினரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னால் முட்டாள் முதலமைச்சர் ஓபிஎஸ்.. அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

முன்னாள் பெண் டிஜிபி ஸ்ரீலேகா மீது போக்ஸோ வழக்கு: என்ன நடந்தது?

அமைச்சரவை கூட்டத்திற்கு வர முடியாது: மெசேஜ் அனுப்பிய அதிகாரி 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட்

மைசூர் சில்க் உற்பத்தியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்: முதலமைச்சர் சித்தராமைய்யா தலையிட கோரிக்கை..!

2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற திமுக நிர்வாகி கைது! கிருஷ்ணகிரியில் பயங்கரம்:

அடுத்த கட்டுரையில்
Show comments