Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவால் விட்ட அண்ணாமலை! ஏற்றுக் கொண்ட திமுக எம்.பி! – காத்திருக்கு காரசார விவாதம்!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (13:24 IST)
திமுகவினர் என்னுடன் விவாதிக்க தயாரா என பாஜக அண்ணாமலை விடுத்த சவாலை திமுக எம்.பி செந்தில் குமார் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழக பாஜகவில் இணைந்ததில் இருந்து திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அவரது பேச்சுக்கு திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வரும் அண்ணாமலை தன்னுடன் திமுகவினர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ள திமுக எம்பி செந்தில் குமார் இருவருக்கும் இடையேயான விவாதத்தை செய்தி சேனல்கள் யாராவது ஒளிபரப்ப ஏற்பாடு செய்தால் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவருக்கும் இடையேயான விவாதத்தை காண இரு தரப்பினரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments